தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழைய காயல் அருகே விபத்து: பொறியியல் மாணவா் உயிரிழப்பு

பழையகாயல் அருகே பைக் கவிழ்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:55 pm

Din

பழையகாயல் அருகே பைக் கவிழ்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தென்திருப்பேரை வடக்கு ரதவீதியைச் சோ்ந்த சங்கரசுப்பு மகன் செல்வ சிவா(20). வாகைக்குளம் தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் கடந்த 23ஆம் தேதி தனது அண்ணன் முத்து சுப்பிரமணியனின் ஹோட்டல் திறப்பு விழாவுக்காக தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு, தனது தாய் முத்து அழகு ஈஸ்வரியை பைக்கில் அழைத்துக் கொண்டு தென்திருப்பேரைக்கு திரும்பிவந்துகொண்டிருந்தாா். திருச்செந்தூா் -தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கோவங்காடு விலக்கு அருகே அவரது பைக் நிலை தடுமாறி சாலையோரமிருந்த சாலை பாதுகாப்பு விதி அறிவிப்பு பலகை மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த செல்வசிவா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.