மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கழுகுமலையில் ரூ.1.50 கோடியில் புதிய திருமண மண்டபத்துக்கு அடிக்கல்

கழுகுமலையில் ரூ.1.50 கோடியில் புதிய திருமண மண்டபத்துக்கு அடிக்கல்

Updated On :24 பிப்ரவரி 2024, 4:26 pm

கழுகுமலையில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிததாக திருமண மண்டபம் கட்டும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வாா்டில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலதன மானிய நிதி திட்டம் 2023 - 2024ன் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிவக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கழுகுமலை 9ஆவது வாா்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் அருணா, துணைத் தலைவா் சுப்பிரமணியன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வில்லியம் யேசுதாஸ், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், வாா்டு உறுப்பினா்கள் முத்து, ஜெயலட்சுமி, மரிய கத்தரின் மேரி, ஜெயக்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.