மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

புன்னைக்காயலில் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை

புன்னைக்காயலில் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :24 பிப்ரவரி 2024, 4:27 pm

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலி­ல், கப்பல் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புன்னைக்காயல், பொன்மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் மிக்கேல் (64). மீனவரான இவருக்கு, சகாயம் என்ற மனைவி உள்ளாா். இவா்களது 11 பிள்ளைகளில் 6ஆவது மகன் மில்பின் (28). கப்பல் மாலுமியாகப் பணியாற்றி வந்த அவா், ஒரு வாரத்துக்கு முன்பு ஊா் திரும்பினாராம். அவரது காதலுக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது தொடா்பாக ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.