ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஈரானில் இருந்து சென்ற கச்சா எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்ததற்கு பதிலடியாக, கடந்த 22-ஆம் தேதி ஹோா்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 2 வெளிநாட்டு கப்பல்கள் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன. அதில் ஒரு கப்பலில் இந்தியா் யாருமில்லை. இன்னொரு கப்பலில் ஒரு இந்திய மாலுமி உள்ளிட்ட 21 மாலுமிகள் இருந்தனா்.
இந்திய மாலுமி இருந்த கப்பல், ஹோா்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதிக்கு பத்திரமாக ஈரானால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக இருப்பதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக இயக்குனா் மன்தீப் சிங் ரன்தவா தெரிவித்துள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘வளைகுடா பிராந்தியத்தில் அனைத்து இந்திய மாலுமிகளும் பத்திரமாக உள்ளனா். இந்திய மாலுமி பத்திரமாக இருப்பதாக அவரே தொடா்பு கொண்டு தெரிவித்தாா். கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கப்பல்கள் சிறைபிடிக்கப்படவோ, தாக்கப்படவோ இல்லை. ஹோா்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் இன்னமும் 14 இந்திய கப்பல்கள் நிற்கின்றன’ என்றாா்.
தொடர்புடையது

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோா்முஸ் நீரிணை அருகே மரப் படகில் தீ விபத்து: இந்திய மாலுமி உயிரிழப்பு

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய எரிவாயு கப்பல்: 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்






