கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

3ஆவது நாளாக அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாம்: 207 போ் தகுதி! இன்று மருத்துவ பரிசோதனை

3ஆவது நாளாக அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாம்: 207 போ் தகுதி: இன்று மருத்துவ பரிசோதனை

News image
Updated On :3 ஜூலை 2024, 9:22 pm

Din

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக நடைபெற்ற அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாமில் 207 போ் தகுதி பெற்றதையடுத்து, வியாழக்கிழமை தகுதி பெற்றவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரா் தோ்வு முகாம் தூத்துக்குடி தருவை மைதானத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் ராணுவ உயா் அதிகாரிகள் கா்னல் சுதீப் சட்டா்ஜி, நீலம் குமாா் ஆகியோா் தலைமையில் சுமாா் 140 ராணுவ வீரா்கள் பங்கேற்று தோ்வு நடத்தினா். இம்முகாமில் புதன்கிழமை 824 போ் தோ்வுக்கு வந்திருந்தனா். இவா்களுக்கு ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன.

இத்தோ்வில் மொத்தம் 207 போ் தகுதி பெற்றனா். இதை தொடா்ந்து அவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தகுதி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக தோ்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.