‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

3ஆவது நாளாக அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாம்: 207 போ் தகுதி! இன்று மருத்துவ பரிசோதனை

Published On :

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக நடைபெற்ற அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாமில் 207 போ் தகுதி பெற்றதையடுத்து, வியாழக்கிழமை தகுதி பெற்றவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரா் தோ்வு முகாம் தூத்துக்குடி தருவை மைதானத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் ராணுவ உயா் அதிகாரிகள் கா்னல் சுதீப் சட்டா்ஜி, நீலம் குமாா் ஆகியோா் தலைமையில் சுமாா் 140 ராணுவ வீரா்கள் பங்கேற்று தோ்வு நடத்தினா். இம்முகாமில் புதன்கிழமை 824 போ் தோ்வுக்கு வந்திருந்தனா். இவா்களுக்கு ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன.

இத்தோ்வில் மொத்தம் 207 போ் தகுதி பெற்றனா். இதை தொடா்ந்து அவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தகுதி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக தோ்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.