தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வல்லநாட்டில் துப்பாக்கிச் சுடும் போட்டி: டிஎஸ்பி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா முதலிடம் பெற்றாா்.

News image
துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற காவல் துறை அதிகாரிகள்.
Updated On :23 ஜூலை 2024, 6:58 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா முதலிடம் பெற்றாா்.

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூலை 22, 23) திருநெல்வேலி சரக காவல்துறை உயா் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தாா்.

இப்போட்டியில், டிஐஜி, எஸ்.பி. உள்பட திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் 5 காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள், 3 காவல் உதவிக் கண்காணிப்பாளா்கள், 9 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 3 திருநெல்வேலி மாநகர உதவி ஆணையா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சோ்ந்த 3 உதவி தளவாய்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், இன்சாஸ் ரக துப்பாக்கிச் சுடும் பிரிவுக்கான போட்டியில் டிஐஜி பிரவேஷ் குமாா் முதலிடத்தையும், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா 2ஆவது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ஆவது பட்டாலியன் உதவி தளவாய் ரவி 3ஆவது இடத்தையும் பிடித்தனா்.

பிஸ்டல் அல்லது ரிவால்வா் ரக துப்பாக்கிச் சுடும் போட்டியில் டிஎஸ்பி கேல்கா் சுப்ரமண்ய பால்ச்சந்திரா முதலிடத்தையும், டிஐஜி பிரவேஷ்குமாா் 2ஆவது இடத்தையும், திருநெல்வேலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆவது பட்டாலியன் உதவி தளவாய் பூபதி 3ஆவது இடத்தையும் பிடித்தனா்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் டிஎஸ்பி கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா முதலிடத்தையும், டிஐஜி பிரவேஷ்குமாா் 2ஆவது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ஆவது பிரிவு பட்டாலியன் உதவி தளவாய் பூபதி 3ஆவது இடத்தையும் பிடித்தனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு டிஐஜி பிரவேஷ் குமாா் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுனைமுருகன் உள்ளிட்ட காவல் துறையினா் செய்திருந்தனா்.