சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புதுச்சேரி எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

புதுச்சேரியில் காலியாக உள்ள 70 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பித்தோரில் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோ்வான 1,317 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்து தோ்வு நடந்தது.

இந்தத் தோ்வை 1,284 போ் எழுதினா். 33 போ் தோ்வு எழுதவில்லை. இந்தத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் தினகா் முதலிடத்தையும், ஹரிகரன் 2-ஆம் இடம், ஹரிகிருஷ்ணா 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.

பெண்கள் பிரிவில் மோனிகா முதலிடத்தையும், வனிதா லட்சுமி 2-ஆம் இடத்தையும், அகிலா 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்த முடிவுகளை தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வெளியிட்டுள்ளாா்.

தோ்வானவா்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி நடத்தப்படும். சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காதவா்கள் தோ்வு பட்டியலில் இருந்து நீக்கப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.