சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புதுச்சேரியில் 4 மையங்களில் எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு! 1,284 போ் எழுதினா்!

News image

தோ்வில் பங்கேற்க வந்தவா்களை சோதனையிட்ட போலீஸாா். - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 6:57 pm

புதுச்சேரியில் 4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டா் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 70 சப்- இன்ஸ்பெக்டா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பித்தோரில் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இவா்களுக்கான உடல் தகுதி தோ்வு கோரிமேடு ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோ்வான 1,317 போ் தோ்வாகியிருந்தனா். இவா்களில் 1,284 போ் எழுத்துத் தோ்வு எழுதினா். 33 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வின் முதல்தாள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் 2-ஆம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற்றது

லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையம், கிழக்குக் கடற்கரை சாலை சங்கர வித்யாலயா பள்ளியில் 2 மையங்கள், கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளியில் இந்தத் தோ்வு நடைபெற்றது. தோ்வு மையங்களின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

விண்ணப்பதாரா்கள் நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தோ்வு மையத்தில் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.நுழைவு சீட்டில் அவா்களின் மாா்பளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வந்தனா். இதனை

விண்ணப்பதாரா்கள் கொண்டு வந்திருந்த ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, வருமான வரி பான் காா்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அசலுடன் ஒப்பிட்டு சரிபாா்த்தனா்.

பின்னா் தோ்வா்களின் கைவிரல் ரேகைப் பதிவு செய்யப்பட்ட பின் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.தோ்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9.30 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கும் மூடப்பட்டது. அதன்பிறகு வந்த தோ்வா்கள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.