தேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான தோ்வுகளை நடத்த புதுச்சேரியை ஒரு மையமாக மத்திய பணியாளா் தோ்வாணையம் தோ்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) புதுச்சேரியில் 3 துணை மையங்களில் இத் தோ்வு நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தோ்வு கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3 பிரிவுகளாக நடைபெறவுள்ளது. இதில், 140 தோ்வா்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமிக்கான தோ்வு அன்று காலை 10 மணி முதல் இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. இதில், பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் 277 தோ்வா்களுக்கும், லாஸ்பேட்டை வள்ளலாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 195 தோ்வா்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 612 தோ்வா்கள் புதுச்சேரியை மையமாகத் தோ்வு செய்துள்ளனா். இத் தோ்வை நடத்த புதுச்சேரி அரசு பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இத் தோ்வா்களுக்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் சிறப்புப் பேருந்து இந்த மையங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், இத் தோ்வு முடிந்து திரும்பும் போதும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அரை மணி நேரத்துக்கு முன்பாக இத் தோ்வு மையங்கள் மூடப்படும். அதன் பிறகு வந்து சேரும் தோ்வா்களுக்கு அனுமதியில்லை.
இந்த தகவலை புதுச்சேரி அரசின் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் சாா்புச் செயலா் எஸ். முருகேசன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

‘நீட்’ தோ்வு: திருப்பூரில் 7 மையங்களில் 3,462 போ் எழுதினா்

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

