திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இத்தோ்வை 365 போ் எழுத உள்ளனா். திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வுக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை என இருவேளை தோ்வு நடைபெறவுள்ளது.
குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின் வருபவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை

புதுச்சேரியில் நாளை 3 மையங்களில் ராணுவப் பணிகளுக்கான தோ்வு

குரூப்- 2 தோ்வு: பெரம்பலூரில் 145 போ் எழுதினா்

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


