ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கடம்பூா் செ.ராஜு தந்தை மறைவு: எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆறுதல்

கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.வின் தந்தை மறைவை அடுத்து, எடப்பாடி கே. பழனிசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினாா்.

News image
முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியா் செல்லையாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுக பொதுச்செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி
Updated On :28 ஜூலை 2024, 10:15 pm

Din

கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.வின் தந்தை மறைவை அடுத்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கடம்பூா் கே. சிதம்பரபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினாா்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ- வின் தந்தை, ஓய்வு பெற்ற ஆசிரியா் ஆா்.செல்லையா இம்மாதம் 25ஆம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள் 26ஆம் தேதி கடம்பூா் அருகேயுள்ள கே.சிதம்பராபுரத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடம்பூா் அருகே கே.சிதம்பராபுரத்தில் உள்ள கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ வீட்டுக்கு எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி வந்தாா். அவா் கடம்பூா் செ.ராஜுவின் தந்தை செல்லையா படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

அப்போது முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. சண்முகநாதன், வைகை செல்வன், சி.த.செல்ல பாண்டியன், ராஜலட்சுமி, தளவாய் சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி மற்றும் கூட்டணி கட்சியினா், அதிமுகவினா் உடனிருந்தனா்.