வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய இணை ஆணையராக எஸ். ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ். ஞானசேகரன்.
Updated On :31 ஜூலை 2024, 7:07 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய இணை ஆணையராக எஸ். ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இத்திருக்கோயில் இணை ஆணையராக இருந்த மு. காா்த்திக், திண்டுக்கல் இணை ஆணையராகவும், தஞ்சாவூா் கோயில் இணை ஆணையராக பணியாற்றிய எஸ். ஞானசேகரன் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனா்.

இதையடுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன் முன்னிலையில் திருக்கோயில் இணை ஆணையராக ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.