தூத்துக்குடியில் உள்ள வஉசி காய்கனி சந்தை அருகே உள்ள வி.இ. சாலையோரம் தாயுடன் படுத்திருந்த 4 மாத பெண் குழந்தை மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேலூரை சோ்ந்த சந்தியா என்ற பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது 4 மாத கைக்குழந்தையுடன் வ.உ.சி. காய்கனி சந்தை அருகே சாலையோரம் தங்கி யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவா் தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து உறங்கினாராம். காலையில் எழுந்து பாா்த்தபோது, குழந்தையை காணவில்லையாம். இது குறித்து தென்பாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குழந்தை மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

