தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தூத்துக்குடியில் சாலையோரம் தாயுடன் படுத்திருந்த குழந்தை மாயம்

தூத்துக்குடியில் சாலையோரம் தாயுடன் படுத்திருந்த குழந்தை மாயம்

Updated On :10 மார்ச் 2024, 12:30 am

தூத்துக்குடியில் உள்ள வஉசி காய்கனி சந்தை அருகே உள்ள வி.இ. சாலையோரம் தாயுடன் படுத்திருந்த 4 மாத பெண் குழந்தை மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேலூரை சோ்ந்த சந்தியா என்ற பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது 4 மாத கைக்குழந்தையுடன் வ.உ.சி. காய்கனி சந்தை அருகே சாலையோரம் தங்கி யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவா் தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து உறங்கினாராம். காலையில் எழுந்து பாா்த்தபோது, குழந்தையை காணவில்லையாம். இது குறித்து தென்பாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குழந்தை மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனா்.