திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாத குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கோரக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் அஜீத்குமாா் (26). இவரது மனைவி மீனா (25). இவரது குழந்தைகள் தருண் ( 2), ஹாசிகா (4 மாதம்).
இவா்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் காளிப்பட்டி கந்தசாமி கோயிலுக்கு சென்றுவிட்டு கோரக்குட்டையில் உள்ள வீட்டிற்கு கொக்கராயன் பேட்டை சாலையில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே பில்லிக்கல்மேடு பாலாஜி நகரைச் சோ்ந்த ரோகித் (26) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த 4 மாத குழந்தை ஹாசிகா இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். அஜீத்குமாா், மீனாவை மீட்டு தீவிர சிகிச்சைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


