மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளி தற்கொலை

Updated On :15 மார்ச் 2024, 6:50 pm

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சாஸ்திரி நகா் 1-ஆவது தெருச் சோ்ந்த துரைராஜ் மகன் கூலித்தொழிலாளி ஜெயசீலன் (48). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம். இந்த நிலையில், ஜெயசீலன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.