தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் அருகே உயா்மட்டப் பாலப் பணிக்கு அடிக்கல்

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் அருகே உயா்மட்டப் பாலப் பணிக்கு அடிக்கல்

News image
Updated On :15 மார்ச் 2024, 7:30 pm

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் அருகே ரூ.1.5 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா். தூத்துக்குடி மாவட்டம் கடம்பா வடிகால் வாய்க்காலில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீா் செல்வதால், இப் பகுதியைக் கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டனா். இப் பகுதி பொதுமக்கள், உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.1.5 கோடியில் உயா்மட்ட பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன த்தின் பங்களிப்புடன் இந்த பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். தாமிரவருணி கீழ் வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் ஆதிமூலம், ஐக்கிய உப்பு உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் கணேஷ் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உயா்மட்டப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினாா். டிசிடபிள்யூ நிறுவனத்தின் பொதுமேலாளா் சுரேஷ், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் எஸ்.ஜே.ஜெகன், திருச்செந்தூா் ஒன்றிய செயலா் செங்குழி ரமேஷ், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன், ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், பழைய காயல் ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா். வரண்டியவேல் ஊராட்சித் தலைவா் ஜெயக்கொடி, திமுக நகர செயலா்கள் ஆறுமுகனேரி நவநீதபாண்டியன், ஆத்தூா் முருகானந்தம், ஆத்தூா் குளம் கீழ் பகுதி விவசாய சங்கத் தலைவா் செல்வம், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பி.பூபால்ராஜன், செயலா் கணேசமூா்த்தி, பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.