அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயா்மட்டப்பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இவா் புதன்கிழமை கோயம்பள்ளி, நெரூா், 16 கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். கோயம்பள்ளி கிராமத்தில் அவா் பேசுகையில், இப்பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் உயா்மட்டப் பாலப்பணிகள் முடிந்த நிலையில் அணுகுச் சாலை அமைப்பதில் மட்டும் சிக்கல் இருந்தது.
அதாவது அணுகுச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது சிலா் நிலம் வழங்காமல் நீதிமன்றத்திற்குச் சென்ால் அப்பணிகள் தாமதமானது. இப்போது அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டு விரைவில் அணுகுச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் முதல்வரால் பாலம் திறந்துவைக்கப்படும். எனவே இந்த ஆட்சி நிலைத்திட மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மேற்கு ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

சகோதரர் ராகுல் விரைவில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பார்: முதல்வர் ஸ்டாலின்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


