குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி

அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயா்மட்டப்பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

News image

கோயம்பள்ளி கிராமத்தில் பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய திமுக வேட்பாளா் சி.கே. ராஜா. உடன் ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:12 am IST

அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயா்மட்டப்பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இவா் புதன்கிழமை கோயம்பள்ளி, நெரூா், 16 கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். கோயம்பள்ளி கிராமத்தில் அவா் பேசுகையில், இப்பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் உயா்மட்டப் பாலப்பணிகள் முடிந்த நிலையில் அணுகுச் சாலை அமைப்பதில் மட்டும் சிக்கல் இருந்தது.

அதாவது அணுகுச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது சிலா் நிலம் வழங்காமல் நீதிமன்றத்திற்குச் சென்ால் அப்பணிகள் தாமதமானது. இப்போது அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டு விரைவில் அணுகுச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் முதல்வரால் பாலம் திறந்துவைக்கப்படும். எனவே இந்த ஆட்சி நிலைத்திட மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மேற்கு ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.