மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தட்டாா்மடத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தட்டாா்மடத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :22 மார்ச் 2024, 10:50 pm

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டாா்மடத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தொடக்கிவைத்தாா். பல்வேறு வீதிகள் வழியாக இப்பேரணி ஊராட்சி மன்றம் அருகே நிறைவடைந்தது. இதில், முழுமையான வாக்குப்பதிவை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உலகு, கணேசன், நடுவக்குறிச்சி ஊராட்சிச் செயலா் ஆரோக்கியராஜ், மகளிா் சுய உதவிக் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.