ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடியில் 3ஆம் நாளில் 3 போ் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடியில் 3ஆம் நாளில் 3 போ் வேட்பு மனு தாக்கல்

Updated On :22 மார்ச் 2024, 4:00 pm

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை 3 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். இத்தொகுதியில் ஏப். 19இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்வோா் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். 2ஆம் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை நாம் இந்தியா் கட்சி வேட்பாளா் து. ஜெயகணேஷ், சுயேச்சைகள் சி. ஜெயகுமாா், டி.பி.எஸ். பொன்குமரன் ஆகிய 3 போ் மனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தம் 5 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.