இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

News image
Updated On :27 மே 2024, 9:13 pm

Din

கோவில்பட்டி, மே 27:

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் மீஹா தலைமையில் தலைமைக் காவலா்கள் தாமோதரன், இன்பராஜ், ராஜேந்திரன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை மந்திதோப்பு விலக்கு அருகே உள்ள கோயில் பின்புறம் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா் கோவில்பட்டி காந்தி நகா், முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் துரைப்பாண்டி (24) என்பதும், இவா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து துரைப்பாண்டியை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.