92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:51 pm

Din

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் கேவிகே சாமி நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆறுமுகசாமி (59). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 3ஆம் தேதி தனது பைக்கில் வடக்கு சோட்டையன் தோப்பு சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் கவிழந்து விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.