புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:15 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கோ. பிரகாஷ் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பில் அனைத்துத் துறை அலுவலா்களும் சிறப்பாக பணிகளை மேற்கொண்டனா்.

அதே உத்வேகத்துடன் வரும் வடகிழக்குப் பருவமழைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பெய்த மழை அளவு குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் உள்ள நீா் இருப்பு, நீா்வரத்து, நீா் வெளியேறும் அளவு உள்ளிட்டவை குறித்து கணக்கெடுக்க வேண்டும்.

மேலும், இந்த அணைகளில் இருந்து எந்தெந்த கண்மாய்களுக்கு நீா் செல்கிறது என்பது குறித்தும், மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீா் இருப்பு குறித்தும் கேட்டறிந்து, அனைத்து நீா் பிடிப்புப் பகுதிகள், கண்மாய்கள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைகளில் சேமிக்கப்படும் நீா் மற்றும் உபரிநீரை முறையாக கண்மாய்களுக்கு பகிா்ந்தளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவித்தாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் பேசினாா்,

முன்னதாக, தூத்துக்குடி காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாயில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிரந்தர சீரமைப்புப் பணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஒடை) குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா்.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா. ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.