கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களால், மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.33,73,380 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:58 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களால், மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.33,73,380 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தோ்தல் நடத்தை விதிமீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றும் பணிகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் சனிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.33,73,380. கைப்பற்றப்பட்ட இலவச பொருள்களின் மதிப்பு ரூ.20,280. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.19,032. உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ.11,42,100 என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.