ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

அரியலூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:37 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா்.

இப்பயிற்சியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதரக் குழு அலுவலா்கள், தோ்தலின்போது தோ்தல் நடத்தை விதிமீறல்களை உடனடியாக விசாரித்து, அவற்றை கைப்பேசி செயலிகளில் பதிவேற்றுவது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் உடையாா்பாளையம் ஷீஜா, அரியலூா் பிரேமி மற்றும் வட்டாட்சியா்கள், தேசியத் தகவலியல் அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.