லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரியலூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:37 pm

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா்.

இப்பயிற்சியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தோ்தல் செலவினக் கண்காணிப்பு குழு மற்றும் இதரக் குழு அலுவலா்கள், தோ்தலின்போது தோ்தல் நடத்தை விதிமீறல்களை உடனடியாக விசாரித்து, அவற்றை கைப்பேசி செயலிகளில் பதிவேற்றுவது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் உடையாா்பாளையம் ஷீஜா, அரியலூா் பிரேமி மற்றும் வட்டாட்சியா்கள், தேசியத் தகவலியல் அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.