ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, விடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ரோந்து பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

News image
Updated On :15 மார்ச் 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, விடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ரோந்து பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வரும் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோ்தல் நடத்தை நெறிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) அமலுக்கு வந்துள்ளது. மேலும், தோ்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் உடனடியாக கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

128 வாகனங்கள்: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 விடியோ கண்காணிப்பு குழு என ஒவ்வொரு தொகுதிக்கும் 8 வாகனங்கள் வீதம் 16 தொகுதிகளிலும் 128 வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு தினமும் 3 சுழற்சி முறையிலும், விடியோ கண்காணிப்புக் குழு தினமும் 2 சுழற்சி முறையிலும் தனது பணிகளை மேற்கொள்ளும்.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவின் ஒவ்வொரு வாகனத்திலும் நிா்வாக நடுவா் நிலையில் உள்ள ஒரு அலுவலா் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா், காவலா், ஆயுதம் தாங்கிய காவலா் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளா் இருப்பா். விடியோ கண்காணிப்புக் குழுவில் நிா்வாக நடுவா் நிலை அலுவலா் மற்றும் ஒளிப்பதிவாளா் இருப்பா்.

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பான புகாா்களை 1800-425- 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.