92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடியில் பீடி இலை, ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்: 4 போ் கைது

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த மஞ்சள் கிரீம், ஏலக்காய், பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்.

Updated On :23 அக்டோபர் 2024, 10:36 pm

Din

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த மஞ்சள் கிரீம், ஏலக்காய், பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில் உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், போலீஸாா் அடங்கிய குழுவினா் கோவளம் கடற்கரையில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அவ்வழியே வந்த சிறிய ரக லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் முகம் கழுவுவதற்கான மஞ்சள் கிரீம், ஏலக்காய், பீடி இலைகள் என 36 மூட்டைகளில் 3 டன் பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுவது தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்திலிருந்த ஏரல் மாறமங்கலத்தைச் சோ்ந்த முருகன் மகன் நிஷாந்த் (21), அரிபுத்திரன் மகன் விஷ்வா (19), முள்ளக்காடு ராஜீவ் நகா் வடிவேல் மகன் ராஜசீலன் (36), பொட்டல்காடு முத்துகிருஷ்ணன் மகன் முருகராஜ் என்ற வினித் (28) ஆகிய 4 பேரைக் கைது செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.