2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வீரபாண்டியன்பட்டணம் அன்னை தெரசா மனிதநேய இயக்க ஆண்டு விழா

வீரபாண்டியன்பட்டணம் அன்னை தெரசா மனிதநேய இயக்கத்தின் 18-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
அன்னை தெரசா- ஆண்டு விழாவில் நல உதவிகள் வழங்கிய அருள்தந்தை அலாசியுஸ்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:12 pm

Din

வீரபாண்டியன்பட்டணம் அன்னை தெரசா மனிதநேய இயக்கத்தின் 18-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவுக்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவா் சுமதி தலைமை வகித்தாா். மருத்துவா் சுந்தரபாண்டி, டிசிடபுள்யூ உதவி மேலாளா் முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அருள்தந்தையா் அலாசியுஸ், டிமெல் ஆகியோா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு போா்வை, ஆதரவற்ற மனநல காப்பகத்திற்கு புத்தாடைகள், அடைக்கலாபுரம் அறநிலைய தத்துவள மையத்திற்கு பால்பவுடா் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஜீவன் ஜோதி முதியோா் இல்லத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினா்.

ஏற்பாடுகளை அன்னை தெரசா மனிதநேய இயக்கத்தின் தலைவி மெசினா லிபா்ட்டி பா்னாந்து, துணைத் தலைவி ராணி பீரிஸ், செயலா் பிரசன்னா பிராயி, துணைச் செயலா் மாா்ட்டின் பா்னாந்து, பொருளாளா் லொவினா பீரிஸ் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா். நிகழ்ச்சியை அன்னை தெரசா மனித நேய இயக்கத்தின் முதல் தலைவா் மனுவேல் ராயா் தொகுத்து வழங்கினாா்.