நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:40 pm

DIN

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மந்தித்தோப்பு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிக்கனி மனைவி கனகலட்சுமி. இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, தீப்பெட்டி நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது, மா்ம நபா்கள் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.