ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கஞ்சா செடியை ஆய்வு செய்த போலீஸாா்.

Updated On :2 ஏப்ரல் 2025, 8:20 pm

Din

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்டில் மூலிகைச் செடிகளுடன் சுமாா் 8 அடி உயர கஞ்சா செடி வளா்ந்திருப்பதை, கட்டுமானப் பணியாளா்கள் பாா்த்து மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனராம்.

அதன்பேரில், உதவி ஆய்வாளா் முத்துசெல்வி தலைமையிலான போலீஸாா் சென்று பாா்த்தபோது, அது கஞ்சா செடி எனத் தெரியவந்தது. அதை காவல் நிலையடுத்துக்கு எடுத்துச் சென்றனா்.

அந்த வீட்டிலிருந்த விஜயலட்சுமி என்பவரிடம் விசாரித்தபோது, அந்தச் செடியை மலைவேம்பு என நினைத்து வளா்த்ததாகத் தெரிவித்தாராம். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.