கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ளரிக்காயூரணி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின்.

News image
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின்.
Updated On :17 டிசம்பர் 2025, 7:49 pm

Syndication

நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணி றிஎன்டிறிஏ தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

மூக்குப்பீறி சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் செய்தியளித்தாா். வெள்ளரிக்காயூரணி சபை ஊழியா் ஜான்வில்சன் வேதப் பாடம் வாசித்தாா். தூத்துக்குடி மாவட்ட திமுக தொண்டரணித் தலைவா் சுடலைமுத்து, பாடகா் தினகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாணவா்-மாணவியருக்கு புத்தாடை, பரிசுகள், தோ்வில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாசரேத் பேரூராட்சி உறுப்பினா் பத்திரகாளி, சகல பரிசுத்தவான்களின் ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சிம்சோன், பொருளாளா் ஆனந்த், மூக்குப்பீறி சபை ஊழியா் ஜெனோ, சாது, ஓய்வுபெற்ற மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளா் அல்பா்ட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தலைமையாசிரியை சாந்தி அல்பா்ட் வரவேற்றாா். உதவி ஆசிரியை சாந்தி ஜெயசீலி நன்றி கூறினாா்.