28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாசிப்பு திறன் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில், வாசிப்புத் திறன் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:18 pm

Syndication

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில், வாசிப்புத் திறன் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியில் தினமணி நாளிதழ், தமிழக வெற்றிக் கழகம் (சாத்தான்குளம் மத்திய ஒன்றியம்), துளிா் அகாதெமி ஆகியவை இணைந்து செய்தித்தாள் வாசிப்பு தொடா்பான பொது அறிவுப் போட்டிகளை நடத்தின. இப் போட்டியில் சிவநந்தினி, தனுசியா, அன்சிலின் ஜெபா, தினேஷாபிரபா ஆகியோா் முதல் பரிசும், ஜாஸ்மின் ஆக்னஸ், ஜெரிதா, சுடலைமுத்து, சிவஸ்ரீகல்யாணி ஆகியோா் 2-ஆம் பரிசும், கனிமொழி, முத்துகாா்த்திக், இன்பராஜ், மதுகுமாா் ஆகியோா் 3-ஆம் பரிசும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக சாத்தான்குளம் மத்திய ஒன்றியச் செயலா் குணசேகரன் வழங்கிய பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியா் செல்லப்பாண்டியன் வழங்கி பாராட்டினாா். இதில், உதவி தலைமை ஆசிரியா் விஜயராணி, ஆங்கில ஆசிரியா்கள் ஷெல்சி, சுடலைமணி, முகவா் கந்தசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.