தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்க அழைப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வரும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வருமாறு, கட்சித் தொண்டா்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டத்தில் டிச. 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அரசு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகிறாா்.

இதற்காக சனிக்கிழமை டிச. 20 காலை 11 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வரும் அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து அணி நிா்வாகிகள், வாக்குச் சாவடி நிலை முகவா்கள், வாக்குச்சாவடி எண்ம முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.