பரமன்குறிச்சியில் வேளாண் செயலி அறிமுகம்

Published on

பரமன்குறிச்சி ஸ்ரீகந்தவேல் அகாதெமி சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், வாழை மண்டி வியாபாரிகள் பயன் பெறும் வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும், வேளாண் பே செயலி அறிமுகவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அகாதெமி இயக்குநா் பிா்லாபோஸ் தலைமை வகித்து செயலியை அறிமுகப்படுத்தி அதன் நோக்கம், செயல்பாடு, பயன்கள் குறித்து பேசினாா். தொடா்ந்து, இதே அகாதெமியில் பயின்ற இரு மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். செயலி குறித்து விவசாயிகள், வா்த்தகா்கள் 94899 67600- என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com