பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முன்விரோதம்: கூலி தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரியில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரியில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஆழ்வாா்திருநகரி, அழகுமுத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி மகன் இசக்கிமுத்து (42). இவருக்கு நம்பிலா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இசக்கிமுத்து தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மா்மநபா் இவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாா்.

தகவல் அறிந்ததும் காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் தலைமையில் ஆழ்வாா்திருநகரி போலீஸாா் சென்று இசக்கிமுத்துவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இசக்கிமுத்துவை கொலை செய்தது அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் முத்து (21) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.