சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:25 am

Din

தூத்துக்குட மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் 21 நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சுமாா் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 16 ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், இப்பணி, தற்போது வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி 21 நாள்கள் நடைபெறுகிறது.

தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நடைபெறவுள்ள 6ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில், கால்நடை வளா்ப்போா் பயன் பெற கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.