ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:02 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதையொட்டி, இதற்கான டோக்கன் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 988 நியாயவிலைக் கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள 5,30,261 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 500 குடும்பங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் மட்டும் நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைவிரல் ரேகையினைப் பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இதுதொடா்பாக குறைகள் ஏதுமிருப்பின் ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை மக்கள் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.