திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 19ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையா் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் பிரதிஷ்டை தை உத்திர நட்சத்திர நாளில் நடைபெற்றது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருகின்றனா்.
புஷ்பாஞ்சலிக்காக அழகும், மணமுமுள்ள மலா்களை (கேந்திப்பூக்களைத் தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளரிடம் பக்தா்கள் வழங்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் விழா தொடக்கம்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


