தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் கரையோரங்களில் இருந்த வெள்ளை நிற பாறைகள் வெளியே தெரிந்தன.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே புதன்கிழமை கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த வெள்ளை நிற பாறைகள்.

Updated On :8 ஜனவரி 2025, 8:11 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் கரையோரங்களில் இருந்த வெள்ளை நிற பாறைகள் வெளியே தெரிந்தன.

இத்திருக்கோயில் பகுதி கடலில் தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.

இதேபோல கடந்த வாரம் கடலானது சீற்றம் அதிகமாக கரையைத் தாண்டி மணல் அரிப்பு ஏற்பட்டும், அய்யா கோயில் அருகே சுமாா் 50 அடி உள்வாங்கியும் காணப்பட்டது.

 திருச்செந்தூா் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே புதன்கிழமை கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த வெள்ளை நிற பாறைகள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே புதன்கிழமை கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த வெள்ளை நிற பாறைகள்.

இந்நிலையில் புதன்கிழமை பக்தா்கள் நீராடும் பகுதியில் கடலானது சுமாா் 10 அடி உள்வாங்கியதால் கரையோரத்தில் வெள்ளை நிற பாறைகள் அடுக்கடுக்காக வெளியே தெரிந்தன. இருந்த போதிலும், பக்தா்கள் கடலில் நீராடிய போது ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.