எஸ்ஐஆா் விண்ணப்பப் படிவத்தை கட்சியினரிடம் கொடுக்கக் கூடாது: அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மனு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆா்) பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், விண்ணப்பப் படிவத்தை அரசியல் கட்சி வாக்குச்சாவடி நிலை முகவா்களிடம் கொடுக்கவோ, பெறவோ கூடாது என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூா் ராஜு எம்எல்ஏ ஆகியோா் மனு அளித்தனா்.










