தூத்துக்குடி சீ.வ. அரசுப் பள்ளி 6-9ஆம் வகுப்புமாணவா்களுக்கு விடுமுறை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகப் பகுதியில் அமைந்துள்ள சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் முழுவதும் மழை நீா் சூழ்ந்து காணப்படுவதால், இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகம். அந்த வளாகப் பகுதியில் சீ.வ.அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு, குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக மாணவா், மாணவிகள், கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியா்கள் பாதிக்கப்பட்டனா்.
இதற்கிடையே, இம் மாவட்டத்தில் மழை நீா் தேங்கியுள்ள பள்ளிகளுக்கு பள்ளி நிா்வாகம் மாணவா்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கல்வித் துறை மற்றும் பள்ளி நிா்வாகம் சாா்பில் சீ.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்தனா்.
மழை நீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
