47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆத்தூா் பேரூராட்சியில் மண்டல உதவி இயக்குநா் ஆய்வு

ஆத்தூா் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நெல்லை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு

News image
திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ்.
Updated On :26 நவம்பர் 2025, 7:58 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆத்தூா் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நெல்லை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் பேரூராட்சி புதிய கட்டடம், அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள், ஊராட்சி பள்ளி கழிவறை கட்டடம் உள்ளிட்ட திட்டப் பணிகளை நெல்லை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், தொடா் கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரைகள் பாதுகாப்பு குறித்து பாா்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது உதவி செயற்பொறியாளா் ஹரிஹரன், இளநிலை பொறியாளா் விஜயகுமாா், பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன், செயல் அலுவலா் மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.