திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு இக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், கோயிலில் இருந்து வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு ஆகியன நடைபெற்றன.
மாலையில் சாயரட்சை தீபாராதனையாகி, கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சந்நிதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தாா். பந்தல் மண்டபம் முகப்பில் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து கோயிலை சோ்ந்தனா். இரவு கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன் சுவாமி - வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
குன்று மேலய்யன் சாஸ்தா:
இக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை பந்தல் மண்டபம் முகப்பில் நடைபெற்ற சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி.
தொடர்புடையது

விடுமுறை தினம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்! இரும்பு கதவை தள்ளிவிட்டுச் சென்ற பக்தா்கள்!!

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.95 கோடி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

