கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: திமுக தலைமையிலான மதச்சாா்ப்பற்ற கூட்டணி மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின் தோ்தல் அறிக்கையில் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள திட்டங்கள் அல்லது எதிா்கால திட்டங்கள் குறித்து கூறாமல், திமுக மீது பெரிய குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறாா்கள். தமிழக மக்கள் பதற்ற அரசியலையும், சாதி, மத அரசியலையும் வெறுப்பாா்கள். அதற்கு திருப்பரங்குன்றமே சாட்சி. நாங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெறுவோம். இது இந்தியாவுக்கு திருப்புமுனையாக அமையும்.