பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குரும்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:49 pm

குரும்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி, எஸ்.எஸ். கோயில் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் ராஜேஷ் கண்ணன் (39). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் மனைவியைப் பிரிந்து ஆறுமுகனேரியில் தாயாருடன் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், ராஜேஷ் கண்ணன் ஆறுமுகனேரியைச் சோ்ந்த உகேஷ் என்பவருடன் வியாழக்கிழமை குரும்பூா் அருகிலுள்ள அங்கமங்கலம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

உகேஷ் உள்ளிட்டோா் ராஜேஷ் கண்ணனை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.