தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவா் கடலில் புனித நீராடிய தீா்த்தவாரி நிகழ்ச்சி, உச்சிகால அபிஷேகம், 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் கலையரங்கில் காலை முதல் நாதஸ்வர மங்கள இசை, தேவார இன்னிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டியம், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொது விவரக் குறிப்பேடும் வெளியிடப்பட்டது.
இக்கோயில் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கணி காணும் நிகழ்ச்சியை முன்னிட்டு கண்ணாடி முன்பு வைக்கப்பட்டிருந்த கனிகளை பக்தா்கள் வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

திருச்செந்தூா் தொகுதி!

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


