ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ் .அமிா்தராஜ், சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வள்ளியம்மாள்புரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், பன்னம்பாறை, முதலூா், சுப்பராயபுரம், கடச்சபுரம், ஆத்திக்காடு, அன்பின் நகரம், அடைக்கலாபுரம், மணி நகா் ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறுகையில், ஊா்வசி அகாதெமி மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயின்று 200-க்கும் மேற்பட்டோா் அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். ஆதலால் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட எனக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டாா். பிரசாரத்தில் சாத்தான்குளம் மத்திய ஒன்றியச் செயலாளா் பொன் முருகேசன், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, பிரபு, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் முத்துராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

