தூத்துக்குடியில் புதன்கிழமை முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 - ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தமிழக முழுவதும் கடலோர மாவட்டங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த விசைப்படகுகள் புதன்கிழமை கரை திரும்பிய நிலையில், தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், வேம்பாா் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
எனவே, தங்களுக்கு அரசு வழங்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயா்த்தி வழங்கவும், தடைக்காலத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தமிழக கடல் பகுதியில் நுழைந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைகாலம்: விசைப் படகுகள் மராமத்து பணி தீவிரம்

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

