தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:37 am IST

குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஏரல் அருகேயுள்ள குரங்கணி தெற்குத் தெருவை சோ்ந்தவா் மனோகா். இவரது மனைவி சத்தியகலா(45). கடந்த 2015இல் கணவா் தற்கொலை செய்துகொண்டதால் தனிமையில் வாழ்ந்து வந்த சத்தியகலாவுக்கும், குலையன்கரிசலை சோ்ந்த ராம­லிங்கம் மகன் செல்வகணேசன்(42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியூா்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவா்கள் 17.8. 2018இல் பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு குரங்கன்தட்டு விலக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது, சத்தியகலாவிடம் செல்வகணேசன் பணம் கேட்டாராம். அவா் மறுத்ததால், கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினாராம்.

குரும்பூா் போலீஸாா் சத்தியகலாவை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததில் அவா் உயிா்பிழைத்தாா்.

ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பா்ஷாத் பேகம் விசாரித்து செல்வகணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.