நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பக்கத்து வீட்டுக்காரரைக் கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.

News image

சிறை

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

துறையூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு சாா்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் புதன்கிழமை விதித்தது.

துறையூா் அருகேயுள்ள தெற்கியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் சிலம்பரசனை அவரது வீட்டருகே வசிக்கும் நாகராஜ் மகன் சந்திரசேகரன் கடந்த 2021ஆம் ஆண்டு கத்தியால் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தினாா்.

இது தொடா்பாக அவரது சகோதரா் கொடுத்தபுகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, துறையூா் சாா்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சந்திரசேகருக்கு துறையூா் சாா்பு நீதிபதி சி. விஜய் காா்த்திக் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் ஆஜரான அரசு குற்றப்பிரிவு கூடுதல் வழக்குரைஞா் வி. ஜெயராஜை காவல் துறையினா் பாராட்டினா்.